Monday, November 8, 2010

கோதுமை அல்வா

கோதுமை அல்வா


தேவையானவை

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்
நெய் - 1 கப்
கனோலா எண்ணெய் - 1 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 15

செய்முறை

* மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
* நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
* அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.
* எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.


எப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.

மைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.

ஒப்புட்டு (போளி)

ஒப்புட்டு (போளி)

இதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.
தேவையானவை
கடலைப்பருப்பு - 4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
அச்சு வெல்லம் - 10 பெரியது.
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை - சிறிது.

நல்லெண்ணெய்.


செய்முறை

* மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)
* கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.
* தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.
* பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
* அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
* இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
* சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.
* அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.


* பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)

* நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
* தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.


சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.

நாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அதிரசம்(கச்சாயம்)

அதிரசம்(கச்சாயம்)


தேவையானவை

பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

* அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
* வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
* அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
* மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
* வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
* இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
* மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
* 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.

Sunday, November 7, 2010

கடலை பருப்பு சட்னி

கடலை பருப்பு சட்னி
• கடலைப்பருப்பு - 1/2 கப்
• காய்ந்த மிளகாய் - 5
• புளி - மிகவும் சிறிய நெல்லிக்காய் அளவு
• உப்பு - 1 தேக்கரண்டி
• கடுகு - தாளிக்க
• கறிவேப்பில்லை - 5 இலை
• எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி

• முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும்.
• அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும்.
• கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிடவும்.
• பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை சிறிது தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
• பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும்.
• இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.
• இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கேரட் சட்னி

கேரட் சட்னி

தேவையான பொருட்கள்:

கேரட் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவு

செய்முறை:

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.

கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

பருப்பு சட்னி

பருப்பு சட்னி

தேவையானப் பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

தக்காளி சட்னி

தேவையானப் பொருட்கள்
தக்காளி - 4,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:
தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.

வெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

தேங்காய் சட்னி II

தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 6
பொட்டுக்கடலை - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
பூண்டு - 3 பல்
புதினா இலை - 3
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்

தேங்காய் சட்னி

தேவையானப் பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/2 கப்
பொரிகடலை - 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
கடுகு - தாளிப்புக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு

செய்முறை
முதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் (காம்பை நீக்கிவிடவும்) பொரிகடலை,உப்பு, புளி இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியின் மேல் ஊற்றி கலக்கவும்.

கொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு

காளான் குழம்பு (Mushroom kuzhambu)
தேவையானவை
• காளான் - 1/4 கிலோ
• வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
• கறிவேப்பிலை - சிறிது
• கடுகு
• உப்பு
வதக்கி அரைக்க
• சின்ன வெங்காயம் - 20
• வரமிளகாய் - 4
• மிளகு - 1 டீஸ்பூன்
• சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
• சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
• பட்டை - 4 சிறிய துண்டுகள்
• கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
• மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
• மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
• தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
* இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
* அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.
* பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.

முட்டை குழம்பு 2

தேவையான பொருட்கள்
• முட்டை - 4
• பெரிய வெங்காயம் - 2
• தக்காளி - 1
• பூண்டு - 10 பல்
• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
• எண்ணெய் - 4 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு

செய்முறை
1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டிவைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

முட்டை குழம்பு

முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
• முட்டை - 4
• பெரிய வெங்காயம் - 2
• தக்காளி - 1
• பூண்டு - 10 பல்
• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
• எண்ணெய் - 4 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.



தேவையான பொருட்கள்
1. முட்டை - 4 ( வேக வைத்து வெட்டியது)
2. சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது.
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு
7. கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெயில் வறுத்து அரைக்க:
1. மல்லி - 2 தேக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 3
3. பூண்டு - 2 பல்
4. இஞ்சி - 1/2 இன்ச்
5. மிளகு - 1 தேக்கரண்டி 6. சீரகம் - 1 தேக்கரண்டி 7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி 8. அரிசி - 1/2 தேக்கரண்டி 9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை
தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
வறுத்த‌ பொருட்களை ஆற‌ வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்
(அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி
பெருங்காயம் -வாசனைக்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
காய்ந்த மிளகாய் - 1
இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது
கொத்தமல்லித் தழை ; சிறிது,
துருவிய தேங்காய் ; 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

* மேலும் ருசிக்க, பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்தோ, துருவிய கேரட்டை வதக்கியோ சேர்க்கலாம். எல்லாம் கலந்த பிறகு எலுமிச்சை பழம் பிழிந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்

பி.கு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.
2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.
3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

ஒரு கிண்ணத்தில் உப்புத்தூள், மஞ்சள் தூள் இட்டு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் கலந்து அதிள் எலுமிச்சை பிழிந்து வைத்துக்கொண்டால் கசக்காது. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்,